கல்முனை மண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதற்காக வருகை தந்துள்ள நிருவாக உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர் அஷ்ஷெஹ் TMM.அன்சார் LLB மற்றும் மாநகர ஆணையாளர் ATM.றாபி LLB ஆகியோர்களை மைமூனா சமூக சேவைகள் அபிவிருத்தி அமையத்தினால் வரவேற்கும் நிகழ்வு 2025/01/15ம் திகதி மைமூனா மகளிர் அரபு கலாபீடத்தின் மண்டபத்தில் கௌரவ தலைவர் சிரேஷ்ட உளவள ஆலோசகர் NM. நௌஸாத் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மைமூனா மகளிர் அரபு கலாபீடத்தின் அதிபர் கண்ணியத்திற்குரிய மௌலவி AM.நாசர் மன்பஈ, மைமூனா அமைப்பின் ஆலோசகர்களான அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் கண்ணியத்திற்குரிய மௌலவி அல்ஹாஜ் PMA.ஜலீல் பாகவி, மெடிலேன்ட் வைத்திய சாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் DR SMA.அஸீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாஜ் SLA. ஹலீம், இப்றா ஆரிசியாலையின் உரிமையாளர் அல்ஹாஜ் SLM. நயீர்
மற்றும்
கிறீன்பீல்ட் முஹய்த்தீன் மஸ்ஜிதின் தலைவர் AL. நபீர், செயலாளர் MHA. கரீம் BA, சமூக செயற்பாட்டாளர் முன்னால் மாநகர சபையின் உறுப்பினர் MHM.கலீல் றகுமான்,





மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையதின் கௌரவ செயலாளர் ஆசிரியர் MYM.இம்றான் MA, LLB , கௌரவ பொருலாளர் SM.நபார் , உப செயலாளர்களான Hope Lanka நிறுவனத்தின் பொறுப்பாளர் நிப்றாஸ் மன்சூர் QS, ஆசிரியர் LM.றிஸான் BA உறுப்பினர்களான NTC Lanka Campusயின் பணிப்பாளர் SM.ஹாஜா MA,
ARS நிறுவனத்தின் பொறுப்பாளர் அல்ஹாஜ் MMM.றஹீம், சமூக செயற்பாட்டாளர் SLM.றபீக், கல்முனை பிரதேச செயலகத்தின் ஊழியர் ஜெஸீல், வர்த்தகர் M.ஜெஸீம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன்போது கல்முனை மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
